நியூயார்க்: அமெரிக்காவில் மேலும் மூன்று வங்கிகளை மூட அந்நாட்டு நிதித்துறை உத்தரவிட்டுள்ளது.
இவற்றுடன் சேர்த்து அமெரிக்காவில் இதுவரை மூடப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.
பொருளாதார வீழ்ச்சி காரணமாக வங்கித் துறை அமெரிக்காவில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. வங்கிகள் தொடர்ந்து செயலிழந்து வருகின்றன. லேஹ்மன் பிரதர்ஸ் தொடங்கி பல பிரபல வங்கிகள் சீட்டுக்கட்டு மாளிகை போல சரிந்தன. 69 வங்கிகள் இதுவரை மூடப்பட்டன.
இப்போது பர்ஸ்ட் ஸ்டேட் வங்கி (First State Bank), பர்ஸ்ட் கம்யூனிட்டி வங்கி (Community First Bank) மற்றும் கம்யூனிட்டி நேஷனல் வங்கிகளும் (Community National Bank) மூடப்பட்டுள்ளன. இவை ப்ளோரிடா மற்றும் ஓரகானை மையமாகக் கொண்டு இயங்கி வந்தன.
இந்த வங்கிகளுக்கு ரிஸீவராக அமெரிக்காவின் பெடரல் டெபாஸிட் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை நியமித்துள்ளது அமெரிக்கா.
இவற்றில் பர்ஸ்ட் ஸ்டேட் வங்கி மற்றும் கம்யூனிட்டி நேஷனல் வங்கிகளை ஸ்டெர்ன்ஸ் வங்கிக் கிளைகளாக செயல்பட வைக்க பெடரல் டெபாஸிட் இன்ஷூரன்ஸ் முடிவு செய்துள்ளது.
கம்யூனிட்டி பர்ஸ்ட் வங்கியை ஹோம் பெடரல் வங்கியுடன் இணைக்கிறார்கள்.
இந்த காலாண்டில் 305 வங்கிகள் பெரும் பிரச்சினைகளுக்கு உள்ளாகும் எனக் கணித்துள்ள பெடரல் டெபாஸிட் இன்ஷூரன்ஸ், வருகிற 2013-ம் ஆண்டுக்குள் இன்ஷூரன்ஸ் தொகையாக 70 பில்லியன் டாலர்கள் வரை செலவாகும் எனத் தெரிவித்துள்ளது.
Showing posts with label insurance corp. Show all posts
Showing posts with label insurance corp. Show all posts
Sunday, August 9, 2009
Subscribe to:
Posts (Atom)