முன் பக்கம் கவிதைகள் கட்டுரை சினிமா புத்தகங்கள் சிறுகதைகள் ஈழம் அரசியல் குட்டீஸ் பக்கம் பங்குச் சந்தை

Sunday, September 20, 2009

ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைத் திட்டம்-கைவிட்டார் ஒபாமா

வாஷிங்டன்: ஈரானை சமாளிப்பதற்காக என்று கூறி ரஷ்யாவை எரிச்சல்படுத்தும் வகையில் கடந்த புஷ் ஆட்சியின்போது கிழக்கு ஐரோப்பாவில்அமெரிக்காஅமல்படுத்த முனைந்த ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைத் திட்டத்தை ரத்து செய்து விட்டார் அதிபர் பாரக் ஒபாமா.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் வரவேற்றுள்ளார்.

ஈரானின் நீண்ட தூர ஏவுகணைத் திட்டத்தை சமாளிப்பதற்காகவும், அதை முறியடிப்பதற்காகவும் கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யாவுக்கு அருகில் உள்ள போலந்து நாட்டில் ஏவுகணைகளை வழி மறித்துத் தாக்கும் ஏவுகணைகளை நிறுத்தவும், செக் நாட்டில் ஒரு ரேடாரை வைக்கவும் கடந்த புஷ் ஆட்சியில் முடிவெடுக்கப்பட்டது.

ஆனால் இது தங்களைக் குறி வைக்கும்அமெரிக்காின் குள்ளநரித்தனம் என ரஷ்யா பகிரங்கமாக கண்டனம் தெரிவித்தது. ஜார்ஜ் புஷ்ஷுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், அமெரிக்காவுக்கு அருகில் உள்ள வெனிசூலாவுக்கு தனது அணு ஆயுதம் தாங்கிய போர்க் கப்பலை அனுப்பி வைத்து அமெரிக்காவை எரிச்சலூட்டியது ரஷ்யா.

இந்த ஏவுகணைத் திட்டத்தால்அமெரிக்கா ரஷ்யா இடையிலான உறவு மோசமடைந்து வந்தது.

இந்த நிலையில் தற்போது இந்தத் திட்டத்தை ரத்து செய்து விட்டார் ஒபாமா. இதுகுறித்து அவர் கூறுகையில், கிழக்கு ஐரோப்பாவுக்கான ஏவுகணைப்பாதுகாப்பு் திட்டம் ரத்து செய்யப்படுகிறது. அதற்குப் பதிலாக எளிய முறையிலான பாதுகாப்பு திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

எதிரிகளின் ஏவுகணைத் தாக்குதல்களை முறியடிக்கும் வகையிலான ஏற்பாடுகள் செய்யப்படும்.

நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் வழி மறித்துத் தாக்கும் ஏவுகணைகளுக்குப் பதிலாக குறுகிய மற்றும் நடுத்தர ரக ஏவுகணைகள் நிலை நிறுத்தசப்படும். மேலும், கடலிலிருந்து தாக்கக் கூடிய ஏவுகணைகள் நிறுத்தப்படும்.

இதுகுறித்து செக் மற்றும் போலந்து பிரதமர்களுடன் பேசியுள்ளேன்.

அமெரிக்காவின் இந்த முடிவுக்கும், ரஷ்யா ஏற்கனவே தெரிவித்து வந்த கவலைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

உண்மையில் ஈரானின் ஏவுகணைத் திட்டங்களுக்கு எதிரான நேட்டோவின் திட்டங்களில் ரஷ்யாவும் பங்கேற்க வருமாறு தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்துள்ளதுஅமெரிக்கா இப்போதும் நான் அதை விடுக்கிறேன். அமெரிக்காவின் எந்தத் திட்டமும் ரஷ்யாவுக்கு எதிரானதல்ல என்றார்.

ஒபாமாவின் இந்த அறிவிப்பை ரஷ்ய அதிபர் மெத்வதேவ் வரவேற்றுள்ளார். இது ஒரு நல்ல செய்தி என்று அவர் கூறியுள்ளார்.

ஒபாமாவின் இந்த நடவடிக்கை, ரஷ்யாவின் உறவை புதுப்பித்துக் கொள்வதை மனதில் வைத்தே எடுக்கப்பட்டதாக கருதப்படுகிறது. ரஷ்யாவுடன் பதட்டமான உறவு என்ற வட்டத்தைத் தாண்டி நல்லுறவை பலப்படுத்திக் கொள்ள ஒபாமா விரும்புவதாகவும் கருதப்படுகிறது.

அதேசமயம், ஒரேயடியாக ரஷ்யாவிடம் பணிந்து விட்டதாக காட்டிக் கொள்ளவும் விரும்பவில்லைஅமெரிக்கா அதை நிரூபிக்கும் வகையில், ஈரான் தனது நீண்ட தொலைவு ஏவுகணைத் திட்டங்களை விட குறுகிய மற்றும் நடுத்தர தொலைவு ஏவுகணைகளை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவதாக உளவுத் தகவல்கள் கூறுகின்றன. எனவேதான் நீண்ட தொலைவு ஏவுகணைகளை நிறுத்துவதை கைவிடுவதாக முடிவெடுக்கப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை தொடங்கி விட்டது.

Thursday, August 20, 2009

பத்திரிக்கைகளையும் விட்டு வைக்கவில்லை அமெரிக்க பொருளாதாரச் சரிவு

நியூயார்க்: உலகின் மிகப் பிரபலமான பத்திரிகைகளுள் ஒன்றான ரீடர்ஸ் டைஜஸ்ட்டை வெளியிடும் ரீடர்ஸ் டைஜஸ்ட் அஸோஸியேஷன் நிறுவனமும் திலாவ் நோட்டீஸ் தரப்போவதாக அறிவித்துள்ளது.

விற்பனையில் சரிவு, தொடர் நஷ்டம் மற்றும் கடன்காரர்களின் நெருக்குதல் காரணமாகவே இந்த சட்டப்பூர்வ பாதுகாப்பா நாடுவதாக ரீடர்ஸ் டைஜஸ்ட் அறிவித்துள்ளது.

1922-
ம் ஆண்டு மாதப் பத்திரிகையாக துவங்கப்பட்டது ரீடர்ஸ் டைஜஸ்ட். இன்று 70 நாடுகளில் 21 மொழிகளில் 40 மில்லியன் மக்கள் படிக்கும் பெரிய பத்திரிகையாகத் திகழ்கிறது.

இந்தியாவிலும் இந்தப் பத்திரிகை வெளியாகிறது.

ஆனால் 2005-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தப் பத்திரிகையின் விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட ஆரம்பித்துவிட்டது.

2007-
ல் இந்தப் பத்திரிகையின் உரிமையை மற்றும் அதன் பதிப்பகத்தை வாங்கியது ரிப்பிள்வுட் ஹோல்டிங்ஸ். ஆனாலும் விற்பனை சரிவைத் தடுக்க முடியவில்லை. கடந்த ஆண்டுவரை 8 மில்லியனாக இருந்த சர்க்குலேஷன் இந்த ஆண்டு 5.5 மில்லியனாகக் குறைந்துவிட்டதால், பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

இன்னொரு பக்கம் இந்த நிறுவனத்துக்கு கடன் கொடுத்தவர்கள் பெரும் நெருக்குதல்களைக் கொடுத்து வருகிறார்கள்.

எனவே, தங்களைத் தற்காத்துக் கொள்ள அமெரிக்க சட்டத்தின் பிரிவு 11-ஐப் பயன்படுத்தி திவால் நோட்டீஸ் தர ரீடர்ஸ் டைஜஸ்ட் முடிவெடுத்துள்ளது.

கடன்காரர்கள் நெருக்கடி மற்றும் இதர பொறுப்புகளிலிருந்து இதனால் விடுதலைப் பெற முடியும். தங்களின் அமெரிக்க பிரிவுக்கு மட்டுமே இந்த திவால் நோட்டீஸ் அறிவிப்பு என அப்பத்திரிகை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த நிறுவனத்துடன் சேர்த்தால் அமெரிக்காவில் மட்டும் இந்த பொருளாதார வீழ்ச்சி காலத்தில் திவால் நோட்டீஸ் கொடுத்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் எண்ணிக்கை 13 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் திவாலைத் துவங்கி வைத்தது லேஹ்மன் பிரதர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, August 9, 2009

7 மாதங்களில் அமெரிக்காவில் வேலையிழந்தோர் 10 லட்சம்!

சிகாகோ: அமெரிக்காவில் இந்த ஜூலை மாதம் மட்டுமே 97343 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 6 மாதங்களில் இந்த அளவு பணியாளர்கள் நீக்கப்படுவது இதுவே முதல் முறை. மேலும் அடுத்த காலாண்டிலும் இந்த நிலை தொடரும் என அமெரிக்க புள்ளியியல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தச் செய்தி உலகப் பொருளாதார நிபுணர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. சர்வதேசப் பொருளாதாரம் வீழ்ச்சியிலிருந்து மீண்டு வருவதாக கருத்து பரப்பப்பட்டு வரும் சூழலில், மீண்டும் பெருந்தொகையிலான வேலையிழப்புகள் நடந்திருப்பது, எதிர்காலம் குறித்த பயத்தை உண்டாக்கியிருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து கிடப்பதால், பல நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாதமும் வேலையிழப்போர் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் சற்றே இந்த நிலையில் மாற்றம் தெரிவது போன்ற தோற்றம் தெரிந்தது. ஆனால் அடுத்த ஒரே மாதத்தில் நிலைமை தலைகீழாகிவிட்டது. கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு 97343 பணியாளர்கள் பலவேறு நிறுவனங்களிலிருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவரங்களை அமெரிக்க அரசே அரவித்துள்ளது. அடுத்த மாதம் இந்த எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டக் கூடும் என அச்சம் தெரிவித்துள்ளது அமெரிக்கா.

2009-ம் வருடம் துவங்கி இந்த 7 மாதங்களில் மட்டும் அமெரிக்காவில் பணியிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்குகிறது. 2008-ல் முதல் 7 மாதங்களில் 579260 பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.

இந்த இரு ஆண்டுகளிலும் இதுவரை 20 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோமொபைல் மற்றும் ஐடி துறையில்தான் அதிக பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

இப்படியாக உள்நாட்டு மக்களைக் கூட காப்பற்ற முடியாத அமெரிக்க அரசாங்கம் அந்நிய நாடுகள் மீது ஆக்கிரமிப்பைத் திணிப்பது கேலிக் கூத்தானது தான்!

அமெரிக்கப் பொருளாதாரத்தில் மேலும் சரிவு.... 3 வங்கிகள் மூடல்...

நியூயார்க்: அமெரிக்காவில் மேலும் மூன்று வங்கிகளை மூட அந்நாட்டு நிதித்துறை உத்தரவிட்டுள்ளது.

இவற்றுடன் சேர்த்து அமெரிக்காவில் இதுவரை மூடப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.

பொருளாதார வீழ்ச்சி காரணமாக வங்கித் துறை அமெரிக்காவில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. வங்கிகள் தொடர்ந்து செயலிழந்து வருகின்றன. லேஹ்மன் பிரதர்ஸ் தொடங்கி பல பிரபல வங்கிகள் சீட்டுக்கட்டு மாளிகை போல சரிந்தன. 69 வங்கிகள் இதுவரை மூடப்பட்டன.

இப்போது பர்ஸ்ட் ஸ்டேட் வங்கி (First State Bank), பர்ஸ்ட் கம்யூனிட்டி வங்கி (Community First Bank) மற்றும் கம்யூனிட்டி நேஷனல் வங்கிகளும் (Community National Bank) மூடப்பட்டுள்ளன. இவை ப்ளோரிடா மற்றும் ஓரகானை மையமாகக் கொண்டு இயங்கி வந்தன.

இந்த வங்கிகளுக்கு ரிஸீவராக அமெரிக்காவின் பெடரல் டெபாஸிட் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை நியமித்துள்ளது அமெரிக்கா.

இவற்றில் பர்ஸ்ட் ஸ்டேட் வங்கி மற்றும் கம்யூனிட்டி நேஷனல் வங்கிகளை ஸ்டெர்ன்ஸ் வங்கிக் கிளைகளாக செயல்பட வைக்க பெடரல் டெபாஸிட் இன்ஷூரன்ஸ் முடிவு செய்துள்ளது.

கம்யூனிட்டி பர்ஸ்ட் வங்கியை ஹோம் பெடரல் வங்கியுடன் இணைக்கிறார்கள்.

இந்த காலாண்டில் 305 வங்கிகள் பெரும் பிரச்சினைகளுக்கு உள்ளாகும் எனக் கணித்துள்ள பெடரல் டெபாஸிட் இன்ஷூரன்ஸ், வருகிற 2013-ம் ஆண்டுக்குள் இன்ஷூரன்ஸ் தொகையாக 70 பில்லியன் டாலர்கள் வரை செலவாகும் எனத் தெரிவித்துள்ளது.

Friday, July 31, 2009

அமெரிக்காவுக்கு கதவுகள் திறந்து விட்ட கொலம்பியாவுடனான உறவு குறித்து வெனிசுலா அதிபர் சாவேஸ் மறுஆய்வு


21.07.2009 செவ்வாய் அன்று வெனிசுலா மற்றும் கொலம்பியா ஆகிய இருநாடுகளுக்கு இடையே நடக்கவிருந்த உயர் மட்டக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது*.


வெனிசுலாவின் அண்டை நாடு கொலம்பியா. 2008 - 2009 ஆண்டுகளில் கொலம்பியாவில் இயங்கிய புரட்சிப் படையை அழிக்க அமெரிக்க உதவியை நாடியது கொலம்பியா. அமெரிக்கத் துணையுடன் கொலம்பியா புரட்சிப் படை முகாம்களை தாக்கிய போது சாவேஸ் அதனை எதிர்த்தார். சமரசம் செய்யவும் முயற்சித்தார்.


கொலம்பியா சமீபத்தில் அதன் எல்லையில் ஐந்து ராணுவ தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி அளித்தது*. இதனால் கொலம்பியாவுடனான உறவுகள் மறு ஆய்வு நடத்தப்படும் என வெனிசுலா அதிபர் சாவேஸ் செவ்வாய் அன்று அறிவித்தார்.


அமெரிக்காவுக்கு அனுமதி அளித்த கொலம்பியாவின் முடிவு வெனிசுலாவுக்கு ஆபத்தை அளிக்கக் கூடும் என்பதால் அதனுடனான உறவுகள் மற்றும் தூதரகத் தொடர்புகள் பற்றி மறு ஆய்வு செய்யுமாறு தனது வெளியுறவுத் துறை அமைச்சர் நிகோலஸ் மது ரோவுக்கு அதிபர் சாவேஸ் உத்திரவிட்டுள்ளார்.


தனது நாட்டைத் தொடர்ந்து தாக்கி வரும், புதிய தாக்குதல்களுக்குத் தயாராகும், பல அரசுகளைக் கவிழ்த்த ‍‍‍ஹோண்டுராசில் கலகம் ஏற்படுத்திய அமெரிக்காவுக்கு கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக சாவேஸ் குற்றம் சாட்டினார். கொலம்பியாவின் ஆதரவு மூலம் அமெரிக்கா வெனிசுலாவைத் தாக்கக் கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.

லத்தின் அமெரிக்கத் தலைவர்கள் பலரும் கொலம்பியாவின் அமெரிக்க உறவை கண்டித்துள்ளனர்.


போதைப் பொருள்கள் கடத்தல்களைத் தடுப்பது என்ற போர்வையில் அமெரிக்கா காலூன்றப் பார்ப்பதாக பொலிவிய அதிபர் ஈவோ மொரேலஸ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் கலகங்களை உருவாக்கி ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ‍ஹோண்டுராஸ் போன்ற நாடுகளில் பிரச்சனை உருவாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

- கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி

* Janasakthi 23 July 2009 Page 7